Tuesday, 8 December 2015

குடி நீர் வழங்கல்.


கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உதநகர்(ஊரியான்)
நெடுங்காலமாக நன்னீர் அதாவது குடி நீர் பெறுவதில் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறது,
அவசிய தேவைகளுக்கான குடிப்பதற்கான,உணவு சமைப்பதற்கான நீரை பெறுவதற்காக பிராதான வீதியைக்கடந்து சில மைல்கள்தாண்டியும் செல்லவேண்டியதாயிருக்கிறது இந்த நிலையில் பலவருடமாகவே நீரைப்பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் குடத்துடன் வீதியைக்கடந்து செல்வதை கண்டிருக்கிறோம் கவலை கொண்டிருக்கிறோம் இவற்றிற்கு எப்போது தீர்வு வரும் யார் முடிவு காண்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்....